(சப்னி)
இன்று
2015.10.01 சர்வதேச சிறுவர் தினம் நிந்தவூர் கமு/ கமு/ இமாம் கஸ்ஸாலி
வித்தியாலயத்தில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. பாடசாலையின் அதிபர் ஏ.
எம். எம். பாரூக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இப்பாடசாலையின் பிரதி
அதிபர் ஜனாப் எம். அச்சிமுகம்மட், ஆசிரிய ஆசிரியைகள், நிந்தவூர் பிரதேச
செயலக சிறுவர் பாதுகாப்பு அதிகாரி ஜனாப். ஏ. கே. எம். பர்சாட், மாணவ
மாணவிகள் மற்றும் சம்மாந்துறை போலீஸ் நிலைய பரிசோதகர் ஜனாப். அமீர்,
சாஜன்ட் அப்துல் ரஹீம் உட்பட பலர் கலந்து கொண்டதோடு பாடசாலை அதிபர் பிரதி
அதிபர் மற்றும் ஆசிரியர் குழாத்தினால் மாணவ செல்வங்கள் பாராட்டி
வாழ்த்தப்பட்டதோடு இன்றைய தினம் பல போட்டி நிகழ்சிகள் இவர்களுக்காக ஏற்பாடு
செய்யப்பட்டது.
அதற்கிணங்க
இன்றைய தினம் சிறுவர்களுக்கான பலூன் உடைத்தல், பலூன் பாதுகாத்தல்,
முயலோட்டம், எலியோட்டம், போத்தலில் தண்ணீர் நிரப்புதல், மற்றும் கயிறு
இழுத்தல் போன்ற சுவாரஸ்யமான நிகழ்சிகள் பல இடம்பெற்றதோடு போட்டி
நிகழ்ச்சியில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவ செல்வங்களுக்கு பரிசில்களும்
வழங்கி வைக்கப்பட்டதோடு கடந்த 2014 புலமைப்பரிசில் பரீட்சையில்
சித்தியடைந்து உதவித்தொகை பெறும் மாணவர்களுக்கான நினைவுச்சின்னமும்
வழங்கிவைக்கப்பட்டது.
மேலும்
2015 ம் ஆண்டுக்கான சமூக விஞ்ஞான போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாம்
இடத்தை பெற்று தேசிய மட்ட போட்டியில் பங்கு பற்றி இப்பாடசாலைக்கு பெருமை
சேர்த்த மாணவன் செல்வன் ஏ. எச். எம். சஸ்லீன் அவர்கற்கு விஷேட பரிசு அவரை
பயிற்றுவித்த சிரேஷ்ட சமூக கல்வி ஆசிரியரும் நிந்தவூர் கமு/ கமு/ இமாம்
கஸ்ஸாலி வித்தியாலய பிரதி அதிபருமான ஜனாப் எம். அச்சிமுகம்மட் பாடசாலையின்
அதிபர் ஜனாப் ஏ. எம். எம். பாரூக் ஆகியோர்களினால் வழங்கப்பட்டது.
0 comments:
Post a Comment